Wednesday 16 April 2014

பார்த்தது Attharintiki Daredi #மொக்கை ஃபில்ம் க்ளப் #சாவுங்கடா 2

 

அத்தாரின்ட்டிகி தாரேதி (அத்தை வீட்டுக்கு வழி என்ன?) – தெலுகு படம் 2013

ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் நடித்து போன ஆண்டு வெளிவந்த படம்தான் அத்தாரின்ட்டிகி தாரேதி. இந்த படம் வெளியாகும் முன்பே அதனுடைய 90 நிமிட காட்சிகள் ஆனலைனில் வெளியாகிவிட, அவசர அவசரமாக இதனை வெள்ளிதிரையில் வெளியிட்டார்கள். படம், சும்மா சொல்லக்கூடாது, பம்பர் ஹிட்.

இந்த படத்தில் பவன் கல்யாண் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். காதல் திருமணம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்த அவருடைய அத்தையை மறுபடியும் தனது தந்தையுடன் சேர்க்க அவர் இந்தியா வருகிறார். அத்தையின் வீட்டில் கார் ட்ரைவராக நடிக்கிறார்.

இதுக்கு மேலே கதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி எழுதவில்லை என்றால் ஜென்மசாபல்யம் கிட்டவே கிட்டாது.

படத்தின் க்ளைமேக்சில் பவன் கல்யாண் அத்தை பெண் சமந்தாவுடன் வீட்டை விட்டு ஓடிப்போகிறார். அவர்கள் ஒரு ரெயில் நிலையத்தில் இருக்கும்போது அவருடைய அத்தையும், குடும்பத்தினரும் அதே ரெயில் நிலையத்திற்க்கு வருகிறார்கள். இப்போதுதான் அதகளம் ஆரம்பம்.

பவன் கல்யாண் தன்னுடைய மேனேஜரிடம் “எனக்கு ஐந்து நிமிஷத்தில் இந்த ரெயில்வே ஸ்டேஷன் வேண்டும்” என்று கேட்கிறார். அதற்க்கு அவர் மேனேஜர் “ சார், அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்” என்று சொல்ல, பவன் கல்யாண் பொங்கி எழுகிறார்.

”ஒவ்வொன்றிக்கும் ஒரு விலை இருக்கிறது பாலு! இந்த ஸ்டேஷனுக்கும் ஒரு விலை உண்டு” என்று சொல்ல, “அப்போ பயனிகள் சார்?” என்ற கேள்வி வருகிறது.

”எல்லோரையும் அவங்கவங்க சேர வேண்டிய இடத்துக்கு ஸ்பெஷல் ஃப்ளைட் மூலம் அனுப்பி வைய்யுங்க! ஏர்போர்ட் இல்லாத ஊருக்கு போகிறவர்களை கார் மூலம் அனுப்பி வைய்யுங்க!

மினிஸ்டருக்கு மெஸ்சேஜ் அனுப்புங்க, ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரெக்வஸ்ட் குடுங்க! அவங்க ஒத்துக்கலைன்னா பயமுறுத்துங்க, அதையும் மீறினா,,,, கொன்னுடுங்க!

எனக்கு இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம் பாலு! நீ என்ன பண்ணுவியோ தெரியாது! உனக்கு 5 நிமிஷம் டைம் தரேன்!” என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்து என்ன நடந்தது தெரியுமா? ஹீரோயிசத்தின் உச்சமாக, பவன் கல்யாணின் ஆணைப்படி அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்டேஷனே காலியாகிவிடுகிறது.

அடுத்து என்ன நடந்தது என்பதை இந்த யூடியூப் லின்க்கில் காணவும்!

https://www.youtube.com/watch?v=MW5VAT77VlU

Tuesday 15 April 2014

மொக்கை ஃபில்ம் க்ளப் VeeraBhadhra – Apr 28, 2006 #சாவுங்கடா

பாலைய்யா நடித்து 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்த திரைக்காவியத்தில் முக்கியமான ஒரு காட்சியை மன்னிக்கவும், ஒரு திரைக்கவிதையை இப்போது காணப்போகிறீர்கள்.

பாலைய்யாவுக்கும், ஷாயாஜி ஷிண்டேவுக்கும் ஜென்ம பகை. ஷாயாஜி ஷிண்டே ஜெயிலில் இருக்கிறார்.அவரது தங்கை (தனுஸ்ரீ தத்தா) + 3 ரவுடி சகோதரர்கள்.

ஒரு காட்சியில் அந்த 3 அடாவடி சகோதரர்கள் செய்யும் கொடுமையை எதிர்த்து அவர்களை பகைத்துகொள்கிறார் பாலைய்யா.அதனை கண்ட அவர்களது சகோதரிக்கு பாலைய்யா மீது காதல் உண்டாகிவிடுகிறது. பாலைய்யா தன்னுடைய சேரியில் இருக்கும்போது அவரது தங்கை நேரில் வந்து தனது காதலை தெரிவிக்கிறார்.

அப்போது அந்த 3 ரவுடி சகோதரர்கள் தங்களது பென்ஸ் கார் + 35 இதர கார்கள் புடைசூழ பாலைய்யாவின் சேரி பகுதியில் நுழைகின்றனர். தங்கள் தங்கை பாலைய்யாவை விரும்புவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் ‘பென்ஸ் காரில் வரும் எங்களுக்கு நீ மாப்பிள்ளையா?” என்று கோபம் கொண்டு அவரை திட்டுகிறார்கள்.

அப்போது சினம்கொண்டு எழும் பாலைய்யா, “பெஞ்ச் காரில் வரும் உனக்கு இவ்வளவு திமிரா? அப்படியென்றால் கஞ்சி குடிக்கும் எனக்கு எவ்வளவு திமிர் என்பதை காட்டுகிறேன் பார்” என்று சொல்லி, கண்ணசைக்கிறார். அவ்வளவுதான், அந்த பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த கார்கள் அனைத்தையும் சூரியன் படத்து சரத்குமார் போல கைகளாலேயே தூக்கி அந்தரத்தில் நிறுத்திவிடுகின்றனர்.

அப்போது பாலைய்யா மறுபடியும் “பெஞ்சா? கஞ்சியா?” என்று கேட்டு அவர்களை மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

பின்குறிப்பு: இங்கே பாலையா பெஞ்ச் என்று உச்சரித்தது பென்ஸ் காரை என்பதை நினைவில் கொள்க.

https://www.facebook.com/KingViswaTCU/posts/10152330009762290?comment_id=29996201&notif_t=like