Tuesday 15 April 2014

மொக்கை ஃபில்ம் க்ளப் VeeraBhadhra – Apr 28, 2006 #சாவுங்கடா

பாலைய்யா நடித்து 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்த திரைக்காவியத்தில் முக்கியமான ஒரு காட்சியை மன்னிக்கவும், ஒரு திரைக்கவிதையை இப்போது காணப்போகிறீர்கள்.

பாலைய்யாவுக்கும், ஷாயாஜி ஷிண்டேவுக்கும் ஜென்ம பகை. ஷாயாஜி ஷிண்டே ஜெயிலில் இருக்கிறார்.அவரது தங்கை (தனுஸ்ரீ தத்தா) + 3 ரவுடி சகோதரர்கள்.

ஒரு காட்சியில் அந்த 3 அடாவடி சகோதரர்கள் செய்யும் கொடுமையை எதிர்த்து அவர்களை பகைத்துகொள்கிறார் பாலைய்யா.அதனை கண்ட அவர்களது சகோதரிக்கு பாலைய்யா மீது காதல் உண்டாகிவிடுகிறது. பாலைய்யா தன்னுடைய சேரியில் இருக்கும்போது அவரது தங்கை நேரில் வந்து தனது காதலை தெரிவிக்கிறார்.

அப்போது அந்த 3 ரவுடி சகோதரர்கள் தங்களது பென்ஸ் கார் + 35 இதர கார்கள் புடைசூழ பாலைய்யாவின் சேரி பகுதியில் நுழைகின்றனர். தங்கள் தங்கை பாலைய்யாவை விரும்புவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் ‘பென்ஸ் காரில் வரும் எங்களுக்கு நீ மாப்பிள்ளையா?” என்று கோபம் கொண்டு அவரை திட்டுகிறார்கள்.

அப்போது சினம்கொண்டு எழும் பாலைய்யா, “பெஞ்ச் காரில் வரும் உனக்கு இவ்வளவு திமிரா? அப்படியென்றால் கஞ்சி குடிக்கும் எனக்கு எவ்வளவு திமிர் என்பதை காட்டுகிறேன் பார்” என்று சொல்லி, கண்ணசைக்கிறார். அவ்வளவுதான், அந்த பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த கார்கள் அனைத்தையும் சூரியன் படத்து சரத்குமார் போல கைகளாலேயே தூக்கி அந்தரத்தில் நிறுத்திவிடுகின்றனர்.

அப்போது பாலைய்யா மறுபடியும் “பெஞ்சா? கஞ்சியா?” என்று கேட்டு அவர்களை மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

பின்குறிப்பு: இங்கே பாலையா பெஞ்ச் என்று உச்சரித்தது பென்ஸ் காரை என்பதை நினைவில் கொள்க.

https://www.facebook.com/KingViswaTCU/posts/10152330009762290?comment_id=29996201&notif_t=like

No comments:

Post a Comment