Tuesday 12 January 2016

ஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்”




திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். 

உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொல்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்த நேரத்தில் உதவி இயக்குநர் சொன்ன கதை (அல்லது கதை சொன்ன விதம்) அவருக்கு பிடிக்காமல் போக, அவர் வேறு நல்ல கதையை கொண்டுவரும்படி சொல்லி அனுப்பிவிட்டாராம்.

அப்போது அந்த உதவி இயக்குநரின் நண்பர், “சார், நான் ஒரு கதையைச் சொல்லவா?” என்று கேட்க, கே டி குஞ்சுமோனும் தலையசைத்தாராம். இந்த உதவி இயக்குநர் சொன்ன கதை கே டி குஞ்சுமோனுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். உடனே அவர் இதையே படமாக்கலாம் என்று சொன்னதாகவும், அப்போது அந்த உதவி இயக்குநர், “சார், இது என் நண்பன் சொன்ன அதே கதைதான். ஆனால், நான் சற்று தெளிவாக, விளக்கமாக சொன்னேன்” என்று கூற, கே டி குஞ்சுமோன் முதலில் கதை சொன்ன அந்த உதவி இயக்குநருக்கு வாய்ப்பு அளித்தாராம்.

அந்த உதவி இயக்குநர் ஷங்கர்.

அவர் சொன்ன கதைதான் ஜென்டில்மேன்.

அந்த நண்பர் இயக்குநர் ஏ வெங்கடேஷ் என்று பலரிடம், பலவிதமாக, வேறு வேறு வர்ஷனில் இதே கதையைக் கேட்டிருக்கிறேன். (ஏர்போர்ட்டுக்கு போகும்போது, காரில் கதை சொன்னார், காத்திருக்கும்போது கதை சொல்ல அழைத்தார் என்றெல்லாம் ஏகப்பட்ட வர்ஷன் உண்டு). இதைப்போலவே ஒரு சங்கதி எனக்கும் நடந்தது.

ஒரு காலத்தில் ராயப்பேட்டை பைலட் தியேட்டரில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 7 மணி காட்சிக்கும் எனது நண்பர்கள் குழுவுடன் ஆஜராகி விடுவேன். 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்தப் பழக்கம் 2012 நவம்பர் 1 வரை தொடர்ந்தது. அது என்ன 2012ஆம் ஆண்டு நவம்பர் 1 என்றுதானே கேட்கிறீர்கள்? அன்றுதான் ஜேம்ஸ் பாண்ட் 007னின் ஸ்கைஃபால் படம் தமிழில் ரிலீசானது. ஏற்கனவே தமிழில் டப்பிங் செய்யப்படுகின்ற படங்களில், எனக்கு மொழிமாற்றம் குறித்தான விமர்சனங்கள் நிறையவே இருந்தாலும், அந்தப் படத்தில் மொழிமாற்றம் எங்கள் விமர்சனத்தை மேலும் அதிகப்படுத்தியது (குறிப்பாக எதுவும் நினைவில் இல்லை).

மறுநாளே நண்பர் இரவுக்கழுகுடன் அதே படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தோம். ஒரு மாஸ்டர்பீஸை நாம் கிட்டத்தட்ட தவறவிட இருந்தோம் என்பது பிறகுதான் தெரிந்தது. ஆமாம், நேற்று தமிழில் பார்த்த படத்திற்கும், இன்று ஆங்கிலத்தில் பார்த்த ஸ்கைஃபால் படத்திற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். அதாவது தமிழில் நாங்கள் பார்த்தது, ஷங்கர் சொன்னது போல இருந்தது. ஆனால், ஆங்கிலத்தில் பார்த்தது ஏ வெங்கடேஷ் சொன்னது போல இருந்தது. ஸ்கைஃபால் படம் ஏன் இதுவரையில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே ஆகச் சிறந்த படம் என்பது ஆங்கிலத்தில் பார்த்த பிறகுதான் தெளிவாகப் புரிந்தது. அன்று முதல் இனிமேல், டப்பிங் செய்யப்பட்ட படங்களை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன். அதை இன்று வரையிலும் பின்பற்றி வருகிறேன்.


சரி, எதற்கு இந்த பில்ட் அப் என்கிறீர்களா? சமீபத்தில் ஜேம்ஸ் பாண்டின் லேட்டஸ்ட் படமான ஸ்பெக்ட்ர் ஐ பார்த்தேன். அதைப்பற்றி வேண்டப்பட்ட விரோதி ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவரது நண்பரொருவர் குறிக்கிட்டு, “பாஸ், தமிழிலும் டப்பிங் அருமையாக இருந்தது” என்றார். அவரிடம் மேலே டைப்பி இருக்கும் அந்த 281 வார்த்தைகளை மறுபடியும் விவரித்தேன். அதற்கு அவர், “இந்த ஒருமுறை எனக்காக பார்த்து விடுங்கள்” என்று சொல்லி, பார்க்கவும் வைத்து விட்டார். என்ன, மொழிமாற்றம் எப்படி இருந்தது என்று கேட்கிறீர்களா? வேண்டாம் சாமி. ஆளை விடுங்கள்.

சரி, இவ்வளவு நேரம் படித்து விட்டதால், ஒரே ஒரு காட்சியை மட்டும் சொல்லி விடுகிறேன். படத்தில் வரும் ஒரு முக்கியமான வசனம் இது.

I Always Knew That Death Would Wear a Familiar Face; But, Not Yours.

இதற்கு என்ன அர்த்தம் என்று நமக்கு தெரியும்தானே? ஆனால், படத்தில், அதாவது மொழிமாற்றம் செய்யப்பட்ட படத்தில், இதே வசனம் எப்படி வருகிறது தெரியுமா?

மரண ரூபத்தில் நீ என்னை தேடி வருவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

மேம்போக்காக பார்க்கும்போது, இது சரியென்றே பட்டாலும், இது தவறான மொழிபெயர்ப்பு ஆகும். ஏனென்றால், இந்த ஸ்பெக்ட்ர் படத்தின் மிகச்சிறந்த அம்சங்களே அதில் உள்ள ட்ரிப்யூட்களும், வசனத்தில் இருக்கும் நுணுக்கமான அர்த்தங்களும்தான். ஆமாம், இந்தப் படத்தின் முதல் பகுதியில் வரும் பெரும்பாலான வசனங்களுக்கு, உளவியல் சார்ந்த, தத்துவ ரீதியிலான பொருள் கொண்ட விளக்கங்கள் உண்டு (குக்கூ?).

ஒரு படைப்பின் அழகியல் என்ன, அதன் உச்சம் என்ன என்பதை உணர்ந்தே அதை மொழிமாற்றம் செய்ய வேண்டும். குருட்டாம்போக்கில், காசுக்கான தோசையாக செய்யப்படும் இதுபோன்ற மொழிமாற்றங்கள், படைப்பின் மீதான மரியாதையை குலைக்கும் காரணிகளாகவே கருதப்படும். இந்த ஸ்பெக்ட்ர் படத்திலும் அதுதான் நடந்து உள்ளது.

ஆங்கில வசனத்தில் இருக்கும் அந்த கவிதைத்தனமான அழகியலைப் பாருங்கள். பின்னர், அதற்கான தமிழ் வசனத்தைப் படியுங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கே புரியும். புரியவில்லையா? சரி, இதைத்தான் எழுத்தாளர் டாம் ஷுல்மேன் தனது படத்தில் வசனமாகவே சொல்லிவிட்டார். படியுங்கள்.

We don't read and write poetry because it's cute. We read and write poetry because we are members of the human race.       

And the human race is filled with passion.

Medicine, law, business, engineering, these are all noble pursuits, and necessary to sustain life.

But poetry, beauty, romance, love, these are what we stay alive for.

To quote from Whitman: "O me, o life of the questions of these recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish.

What good amid these, o me, o life?

Answer: that you are here. That life exists, and identity.       

That the powerful play goes on, and you may contribute a verse.

That the powerful play goes on and you may contribute a verse. 

What will your verse be?

1 comment:

  1. What u said is correct. I have watched the movie Coruching Tiger and Hidden Dragon in Tamil both in Amsa vision ie Tamil dubbed English Movie and in vijay TV dubbed by some others. Both did not have the same dialogue. At the Climax the daughter of Governor asked a question about how to reach Uda. There is no direct translation from English to Tamil. So watched the same movie in English to know what exactly said by daughter of Governor. Bu I have the habit of watching English version in Tamil only to escape from explaining to my kids.

    ReplyDelete